பரபரப்பு... மீண்டும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

 
சவுக்கு சங்கர்


 
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்.கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட்  பிடிக்கப்பட்டு இருந்தது. அவர் தேனியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது . தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் இவர்களிடம் நடத்தப்பட்ட திடீர் சோதனையில்  தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 சவுக்கு சங்கர்


குறிப்பாக அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம்  என  7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டு 6 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு பின்னர்  ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் வீடுவிக்கப்பட்டார்.

 சவுக்கு சங்கர்


இந்நிலையில் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில்  விசாரணைக்கு சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை.  அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web