பள்ளி மாணவன் கடத்தி கொலை... வழக்கில் திருப்பம்... 2 சிறுவர்கள் கடத்தலுக்கு உதவி!

 
மாணவன் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஓசூர் அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மாணவனைக் கடத்துவதற்கு 15 வயதுடைய 2 சிறுவர்கள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ரோகித்

ஜூலை 2ம் தேதி புதன்கிழமை மாலை ரோஹித் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த கொடூர சம்பவத்தில் கடத்தலுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்செட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞரும் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுவனின் உடலை வைத்து உறவினர்களும், கிராம மக்களும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?