இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி !!

 
விடுமுறை

ஐப்பசி மாதம் துலா மாதம் . இந்த புண்ணிய மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும்  பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டி நின்றன. இதற்கு சிவபெருமான்  நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

தீர்த்தவாரி
 
எனவே, காசிக்கு நிகராக புண்ணிய தலமாக மயிலாடுதுறை போற்றப்படுகிறது. நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது.

விடுமுறை

இதனை தொடர்ந்து ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நவம்பர் 16 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 25-ம் தேதி பணி நாளாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web