பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை... ப்ளான் பண்ணிக்கோங்க!
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை துவங்கி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக இருக்கும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி நாளை செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி, ஓணம் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்று மொத்தமாக 3 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையில் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
