இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை!

இன்று திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆஞ்சநேயர் கோயில் குடமுழக்கு விழா இன்று ஜூலை 7 ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்செந்தூர் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாநில ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!