நாளை பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவு!

 
சர்க்கரை பொங்கல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நாளை முதல் வகுப்பு நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட ஏதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கெனவே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

சர்க்கரை பொங்கல்

இந்நிலையில் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில்  இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் 14ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அடுத்து, முதல் பணிநாளான நாளை ஜூன்10ம் தேதி  பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web