நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... சோளிங்கரில் குடமுழுக்கு விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில்.
இந்த திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஆஞ்சநேயர் கோயில் குடமுழக்கு விழா நாளை ஜூலை 7 ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்செந்தூர் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாநில ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!