கன்னியாகுமரியில் கடல் சீற்றம்... பல அடி உயரத்திற்கு எழும்பிய அலைகள்!

 
தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

குமரி மாவட்ட கடல் பகுதி, கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மழை போன்றவற்றால் அவ்வப்போது சீற்றமாக காணப்படுகிறது. அந்த நேரத்தில் ராட்சத அலைகள் வீசி வருகின்றன. சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி சுற்றுலா பயணிகளை பயமுறுத்தி வருகிறது.

கன்னியாகுமரி

இந்த நிலையில் இன்று அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவானது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. குமரி மாவட்ட மேற்கு கடற்பகுதிகளில் சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள், கடல் அலை தடுப்புச் சுவரில் மோதிச் சென்றன.

கன்னியாகுமரி

நீரோடி முதல் பொழியூர் வரையிலான கடற்கரை கிராமச் சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று பகல் சூறைக்காற்று வீசிய நிலையில், வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web