சாதியக் கொடுமைகளுக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுப்பது? சீமான் கடும் கண்டனம்!

 
சீமான்

மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைத் சேர்ந்த தம்பி வைரமுத்து அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அறிவியல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுமைகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சாதியின் பெயரால் சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மை அற்றவை; ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அவை வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.

திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!

ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளைச் செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது பேரவசியமாகிறது. அவ்வகையில் சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியதும் ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

சீமான்

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் சாதிய ஆணவப்படுகொலைகள் சட்டம்-ஒழுங்கு சீரழிவு மட்டுமல்ல; சமூகநீதியையும், சமத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். சமூக நீதி காவலர்கள் நாங்கள்தான், சாதியை ஒழித்துவிட்டோம், சமத்துவத்தைப் படைத்துவிட்டோம் என்றெல்லாம் மார் தட்டும் திராவிடத் திருவாளர்களின் ஆட்சியில் நாளும் நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுப்பது? திராவிட மாடல் ஆட்சியில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவது எப்போது?
 
ஆகவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த தம்பி வைரமுத்து அவர்களின் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், விரைவாக சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு, எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?