செம... இனி சிலிண்டரில் கியூஆர் கோடு.... அதிரடி அறிவிப்பு!
மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இனி வரும் நாட்களில் கியூஆர் குறியீடு உடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சட்டவிரோத சந்தையை கட்டுப்படுத்தலாம். சிலிண்டர்கள் மீதான கண்காணிப்பையும் இது அதிகப்படுத்த உதவும் எனக் கூறியுள்ளார்.
கியூஆர் குறியீடு அம்சம் சமையல் எரிவாயு சிலிண்டர் விதிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். மேலும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு வழங்கும் உரிமங்களைப் பொறுத்தவரை, பெண் தொழில்முனைவோருக்கு 80% தள்ளுபடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு 50% தள்ளுபடியும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு பெட்ரோல் பம்புகள் 30-50 மீட்டர் இடைபட்ட தூரத்தில் கூட செயல்படும் வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!