ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர்.. நண்பர்களிடம் கூறிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு!

 
பாலியல் தொல்லை

சென்னை சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது 17 வயது இளைய மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் கல்லூரி நண்பர்கள் சிலர் பதட்டத்துடன் மாணவியின் வீட்டிற்கு வந்தனர். அப்போது மாணவியின் சகோதரி, "ஏன் வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

தற்கொலை

அப்போது, ​​“தற்கொலை செய்யப் போவதாக (கல்லூரி மாணவி) எங்களிடம் போனில் கூறினார். "நான் அவளை உடனே பார்க்க வேண்டும்." இதையடுத்து மாணவியின் சகோதரி மற்றும் மாணவியின் நண்பர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.தகவலின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமான செய்திகளை அனுப்பியது தெரியவந்தது. அந்த நபர் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கு அனுப்பி வைத்துவிட்டு, "இதையெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியிடப் போகிறேன்" என்று மிரட்டியுள்ளார். இதனால் வகுப்பிலும் அழுது கொண்டே இருந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு வந்ததும் நண்பர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இது குறித்து அவரது நண்பர்கள் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web