மூத்த மாவோயிஸ்டு பயங்கரவாதி காலமானார்!!

 
சுதர்சன்

இவரை பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மூத்த மாவோயிஸ்டு பயங்கரவாதி சுதர்சன் காலமானார். இவருக்கு வயது 68. இவர் சத்தீஷ்கார் மாநிலத்தின் பஸ்தார் பிராந்திய காட்டுப்பகுதியில் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இது குறித்த தகவலை மாவோயிஸ்டுகள் வெளியிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.  

சுதர்சன்

இவர் தெலுங்கானாவில் பிறந்தவர். இவரது இயற்பெயர்  ஆனந்த் . சுதர்சன் கட்டம், மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை பரப்புவதில்  முக்கிய பங்காற்றியவர். அந்த இயக்கத்தின் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்ததுடன், முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்வடக்கு தெலுங்கானாவில் நக்சல் நடவடிக்கை உச்சத்தில் இருந்த நாட்கள், எந்த ஒரு சம்பவமும் நடக்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. அது நக்சல் வன்முறையா அல்லது காவல்துறையின் பழிவாங்கும் செயலா, குண்டுவெடிப்பு, அரசு சொத்துக்கள் சேதம், இன்பார்மர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களை தூக்கிலிடுவது மற்றும் என்கவுன்டர்களில் நக்சலைட்களைக் கொல்லுவது  போன்ற செயல்களால் தினம் போராட்டகளமாக இருந்தது எனலாம்.

சுதர்சன்

இவரை காண பத்திரிகையாளர்கள் முயற்சித்த போது குக்கிராமத்தில் அந்நியர்களின் வருகை அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. “ஒரு கோப்பை தேநீர் கிடைக்குமா என்று கேட்டபோது அவர்கள் அனைவரும் இறுக்கமாக இருந்தார்கள். குடியிருப்பாளர்கள் வெறுமனே பின்வாங்கி, குழுவுடன் எந்த தொடர்பையும் தவிர்த்துவிட்டனர், ”என்று மூத்த தெலுங்கு பத்திரிகையாளர்  இவரைக் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web