கோவில் வாசலில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கொடூர தாய்!

 
குழந்தை

ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே சாலையோரம் அப்பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக நேற்று மதியம் பிறந்து சில நாட்களே ஆன, பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கோவில் முன்பாக குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அப்பகுதியினர், வாகன ஓட்டிகள் சென்று பார்த்தனர்.

குழந்தை

அப்போது, துண்டினால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். மேலும், 108 ஆம்புலன்சில் ஊழியர்கள்  சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

அங்கு செவிலியர்கள், குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி, மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

குழந்தை

இதனிடையே, குழந்தையை கோவில் முன்பு வீசிச்சென்றது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தேடிவருகின்றனர். முறை தவறி பிறந்ததால் குழந்தையை கோவிலில் வீசினாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

மேலும் கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குழந்தையை வீசி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.  கேவில் முன்பு பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web