மருத்துவ காரணங்களுக்காக கூட நோ தான்... செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!!

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் மோசடி வழக்கில் அமலாக்கத்துறயால் ஜூன்   14 ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது   வழக்கை விசாரித்து வந்த சென்னை அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது.   செந்தில் பாலாஜி பலமுறை   நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், அவரது ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது.  இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை செப்டம்பர் 20ம் தேதி தள்ளுபடி செய்தார்.  

செந்தில் பாலாஜி


அவருடைய நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில்  காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இடையில் அக்டோபர் 9 ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு சிகிச்சை முடிந்து அன்று மாலையே மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  செந்தில் பாலாஜி வழக்கறிஞர் ஜாமீன் கோரி அக்டோபர்  14 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அக்டோபர்  16 ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில்  செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில்   “உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது” என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று “ செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருக்கிறது . எனவே மருத்துவ காரணத்திற்காக  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web