வைரல் வீடியோ!! ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை..பளார் விட்ட இளம்பெண்!!

 
பாலியல் தொல்லை

கர்நாடகா மாநிலம் மாண்ட்யா மாவட்டத்தில் கே.ஆர். பீடே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டபோது, திடீரென இளம்பெண் ஒருவர் சத்தம்போட்டுள்ளார். அதோடு தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞருக்கு பளார் பளார் என அறை விட்டதால் சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


அப்போது பயணிகள் கேள்வி எழுப்பியபோதுதான் தெரிந்தது, தனக்கு பாலியல் தொல்லை அளித்தவரை பெண் தாக்குகிறார் என்று. ஓடும்  பேருந்தில் இளைஞர் தொடர்ந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பெண் எச்சரித்தும்கூட இளைஞர் தனது சீண்டலை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், பேருந்திலே அனைவரின் முன்பும் இளைஞரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைவிட்டார்.

பாலியல் தொல்லை

பின் அந்த பயணியை சட்டையை பிடித்து இழுத்து பேருந்தை விட்டு வெளியே தள்ளினார். இதுதான் சரியான நேரம் என்று அந்தநபரும் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் பேருந்தில் இருந்தவர்கள், அந்த நபரை பிடித்துவைத்திருந்தால் போலீசில் ஒப்படைத்திருக்கலாம் என கூறினர். 

இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web