மாணவிகளிடம் பாலியல் 'சில்மிஷம்'... மாநகராட்சி ஆசிரியர் கைது!
திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, கே.கே.நகரில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவியர், சைல்டு லைன் உதவி எண்ணுக்கு அழைத்து, தங்களுக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்தனர்.

சைல்டு லைன் அமைப்பினர் விசாரணையில், ஆங்கில ஆசிரியரான திருச்சி, கருமண்டபத்தைச் சேர்ந்த டேனியல் சுரேஷ்( 46) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து விசாரித்த திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார், டேனியல் சுரேஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
