கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் உயிரிழப்பு!

 
நீரில் மூழ்கி

தூத்துக்குடி மாவட்டத்தில்  கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தபர் ராஜையா மகன் சந்தானராஜ் (43), இவருக்கு திலகராணி (30) என்ற மனைவியும், 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் பழைய துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுவதற்காக சென்றுள்ளார்.

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

அப்போது துறைமுகத்தில் நிறுத்தி இருந்த கோமாங்கோ படகில் இருந்து அருகில் நின்றுகொண்டிருந்த புளூஹா கப்பலுக்கு தாவிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதுகுறித்து தகவல்அறிந்து துறைமுக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு முதல் உதவி அளித்து பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தருவைக்குளம் கடல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?