அதிர்ச்சி... மணிப்பூரில் 3.6 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்!
ஏற்கெனவே தொடர்ந்து கலவரங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் மணிப்பூரில் 3.6 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தின் லீசாங் கிராமத்தில் வெடிப்பொருட்கள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், அசாம் ரைபிள்ஸ், பாதுகாப்புப்படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் ஒரு கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இம்பால்-சராசந்த்பூர் வழித்தடத்தில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் இருந்து 3.6 கிலோ வெடிப்பொருட்களை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.

இந்த வெடிப்பொருட்களில் வெடிக்கக்கூடிய டெட்டனேட்டர்கள், கார்டெக்ஸ் மற்றும் பிற பாகங்களை மீட்டுள்ளனர். மேலும் இந்த வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டனர்.
முன்னதாக, சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மோல்ஜோல் கிராமத்தில் இருந்து 4 நாட்டு துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 7 துப்பாக்கிகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மணிப்பூரில் கலவரங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் கிலோ கணக்கில் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
