அதிர்ச்சி... 7 வயது சிறுவனைக் கடித்து குதறிய சிறுத்தை... வால்பாறையில் பரபரப்பு!

 
வால்பாறை அரசு மருத்துவமனை

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை, சிறுத்தை ஒன்று கொடூரமாக தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு ட்பட்ட, வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்கினங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென நுழைந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

7வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை

இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, வால்பாறை சிறுகுன்று எஸ்டேட் குடியிருப்பு பகுதியில், தனது வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த மர்தீப் என்ற 7 வயது சிறுவனை பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட குடியிருப்புவாசிகள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி துரத்தினர்.

பெற்றோரிடம் நிதியுதவி வழங்கிய வனத்துறை

தொடர்ந்து, சிறுவனை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுத்தை தாக்கியதில் சிறுவனுக்கு தலை மற்றும் உடலில் நகக்கீறல்கள் காரணமாக பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், எஸ்டேட் பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரத்தை, வனத்துறையினர் பெற்றோரிடம் வழங்கினர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web