அதிர்ச்சி.. அதிமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை.. உட்கட்சி விவகாரத்தில் நடந்த கொடூரம்?

 
புஷ்பநாதன்

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்பநாதன் (வயது 45). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முன்னாள் நகராட்சி கவுன்சிலர் புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் புதுவண்டிபாளையம் சூரசம்ஹார தெருவில் புஷ்பநாதன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பநாதனை வழிமறித்தனர்.

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

இதனால் பீதியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை கீழே இறக்கிவிட்டு ஓட முயன்றார். அப்போது, ​​மர்மநபர்கள் அவரை மடக்கி பிடித்து அரிவாளால் நடுரோட்டில் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, பலியான புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க. கடலூர் நிர்வாகிகள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர், புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உட்கட்சி தகராறு காரணமாக புஷ்பநாதன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார். கொலையான புஷ்பநாதனுக்கும், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால்தான் புஷ்பநாதன் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால், தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலையால் வண்டிப்பாளையம், கடலூரில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web