மருத்துவமனையில் அதிர்ச்சி.. களைக்கொல்லி மருந்தை குடித்து சிறைக் கைதி தற்கொலை!

 
ரமேஷ்

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மருத்துவமனையில் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மேலும் ஒரு கைதி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 300க்கும் மேற்பட்ட தடுப்புக் கைதிகள் உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற 46 வயது கைதி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிறை

இந்நிலையில், மருத்துவமனையின் ஐசியூவில் இருந்த ரமேஷ், யாருக்கும் தெரியாமல் படுக்கைக்கு அருகில் உள்ள  படுக்கையில்  களைக்கொல்லி மருந்தை உட்கொண்ட நோயாளிக்காக மாதிரி எடுத்து வந்த நிலையில், அந்த களைக்கொல்லி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை ரமேஷ் உயிரிழந்தார்.

கொலை

மாடு திருடிய வழக்கில் கைதாகி கடந்த 5ம் தேதி அதே சிறையில் அடைக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் துறவிகாடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 21 வயது இளைஞர் இன்று சிறை வளாகத்தில் உள்ள மாமரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். மரத்தின் மேலே இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிறை நிர்வாகம் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை சிறையில் கைதி ஒருவர் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு கைதி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!