அதிர்ச்சி.. பாமக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
சங்கர்

பாமக நிர்வாகி சங்கர், கடலூரில் வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தபோது மர்ம் நபர்களால் தாக்கப்பட்டார். இதில், சங்கர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் திருப்பதிரிபுலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவரது மகன் சங்கர் என்கிற சிவசங்கர் (43). கேபிள் டிவி பிசினஸ் செய்து வரும் இவர் பாமக நிர்வாகியாக உள்ளார். கடலூர் நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவர். இவர் இன்று (ஜூலை 6) மதியம் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் அவரை வெட்டினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ப

பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வண்டிப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலைச் சம்பவம் நடந்த நிலையில், தற்போது பாமக பிரமுகர் மர்ம ஆசாமிகளால்  வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் சங்கரின் ஆதரவாளர்கள் திரண்டு வருவதால், கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையொட்டி, அரசு மருத்துவமனை சூரப்பநாயக்கன் சாவடி பகுதியிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சங்கரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web