அதிர்ச்சி.. பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 
திரேஸ்புரம்

தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில்  ஃபைபர் மூலம் பொம்மைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின் மளமளவென தீ பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு  வீரர்கள் தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அப்பகுதி மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். உடனடியாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

பின்னர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தொழிற்சாலையில் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web