அதிர்ச்சி.. நடுவானில் விமானத்தில் சிகரெட் பற்ற வைத்த பயணி... அலறியடித்த ஊழியர்கள்!
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று மாலை இண்டிகோ ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
நடுவானில் பயணிக்கும் போது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் கழிவறையில் இருந்து வெளியே வந்த கலீல் கான் (38) என்ற பயணியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் விமான கழிவறையில் புகைபிடித்தது தெரியவந்தது. இதையடுத்து, விமானம் மும்பை வந்தடைந்தபோது, கழிவறையில் புகைபிடித்துக்கொண்டிருந்த பயணி கலீல் கான் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கலீல் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!