அதிர்ச்சி... நேர்மையான பெண் அரசு அதிகாரி கழுத்தறுத்துக் கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்!

 
பிரதிமா

மிக நேர்மையான அரசு அதிகாரி என்று பெயரெடுத்தவர் பிரதிமா. கர்நாடகா மாநிலத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் அவர் கீழே விழுந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவருடைய கார் ஓட்டுனர், பிரதிமாவின் வேலை முடிந்ததும் அவரை, அவரது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, கிளம்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்த பிரதிமா, தொடர்ந்து கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக அந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். பிரதிமாவின் கணவரும், மகனும் வீட்டில் இல்லாத போது இரவு சுமார் 8:30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதிமா

இரவு 8.30 மணியளவில் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இரவு முழுவதும் பிரதிமாவின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளது. நேற்று நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரத்திமாவின் சகோதரர்  தற்செயலாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, தனது சகோதரி இரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்.

முன் தினம் இரவு, தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அப்போது  போனை எடுத்து சகோதரி பதிலளிக்கவில்லை.  அதனையடுத்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டேன்.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

அதன் பிறகு நேரில் சென்று பார்க்கலாம் என வீட்டிற்கு விரைந்தேன். இந்த கோர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தேன் எனக் கூறியுள்ளார்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கர்நாடக அரசில் பணிபுரியும் ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web