அதிர்ச்சி... 22.5 மில்லியன் டாலர் கொள்ளை.. சிக்கிய இந்திய வம்சாவளியினர்!

 
கனடா

ஏப்ரல் 17, 2023 அன்று, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஏர் கனடா விமானம் மூலம் 22.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கனடாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவை கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டனர். டொரோண்டோ விமான நிலையத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்கு கொள்கலன் அன்றைய தினம் திருடப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி கொள்கலன் திருடப்பட்டதாகவும், 2 ஏர் கனடா ஊழியர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதாகவும் போலீசார் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த கனேடிய போலீசார், இந்த வழக்கில் இதுவரை 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் பரம்பல் சித்து (51), அமித் ஐலோடா (10) ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இது தவிர அம்மாட் சவுத்ரி (43), அலி ரால்சா (37), பிரசாத் பரமலிங்கம் (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

 மேலும், அமெரிக்காவில் ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள Durante King-McLean (25) என்ற நபரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிம்ரன் பிரித் பனேசர் (31), அர்சித் குரோவர் (36), அர்சாசன் சவுத்ரி (12) ஆகிய 3 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரம்பல் சித்து மற்றும் சிம்ரன் பிரித் பனேசர் இருவரும் முன்பு ஏர் கனடாவில் பணிபுரிந்துள்ளனர்.

இவர்களால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும், கந்தாவின் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனேடிய போலீசார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web