சென்னையில் அதிர்ச்சி... 35வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை!

சென்னை ஏகாட்டூரில், 35வது மாடியில் இருந்து குதித்து கொரிய மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூர் ஓஎம்ஆர் சாலையில் 40 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 35வது மாடியில் கொரியாவைச் சேர்ந்த யாங் கியூ லிம் (45) என்பவர் தனது மனைவி, மகன் சினோ லிம் (15) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
யாங் கியூ லிம் மறைமலை நகரில் உள்ள கொரிய நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக வேலையாக கடந்த வாரம் தென் கொரியா சென்றிருக்கும் நிலையில், வீட்டில் அவரது மனைவியும், மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.
மகன் சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பன்னாட்டு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் குடியிருப்பின் பின் பக்கத்தில் பயங்கர சத்தம் கேட்டது. அப்போது பணியில் இருந்த பாதுகாவலர்கள், சிறுவனின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஒவ்வொரு மாடியாக சோதனை செய்த போது சினோ லிம் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த தகவல் அவரது தாய்க்கே போலீசார் வந்து சோதனை செய்யும் வரையில் தெரியாமல் இருந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் பதறியடித்தப்படியே கீழே வந்து பார்த்து இறந்து கிடந்தது தனது மகன் தான் என உறுதி செய்தார்.
அதன் பின்னர் கேளம்பாக்கம் போலீசார் வீட்டில் ஆய்வு செய்ததில் கொரிய மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது தந்தை வேலை செய்யும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!