இங்கிலாந்தில் அதிர்ச்சி.. இந்திய வம்சாவளி மூதாட்டி கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!

 
அனிதா முகே

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (66) அங்குள்ள தேசிய சுகாதார சேவையில் (NHS) பகுதி நேர மருத்துவ செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம், வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேரில் உள்ள பர்ன்ட் ஓக் பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் அனிதா முகே காத்திருந்தார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

அப்போது, ஜலால் டெபெல்லா (22) என்ற வாலிபர், அனிதா முகேவின் மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதற்கிடையில், ஜலால் டெபெல்லா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த காயமடைந்த அனிதா முகே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலை

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் ஜலால் டெபெல்லா சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஏன் அனிதா முகேவை கத்தியால் குத்தினார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் இந்திய வம்சாவளி மூதாட்டி வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web