அதிகாலையில் அதிர்ச்சி.. கத்தியுடன் சுற்றித்திரிந்த சைக்கோ.. பலரை தாக்கிய கொடூரம்!
லண்டனில் அதிகாலையில் கையில் வைத்திருந்த வாளால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்டில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் கையில் வாள் ஏந்தி நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
#NOW A incident has been declared near a Tube station in northeast London after reports a man wielding a sword attacked members of the public and police officers. 👀 ##Londonpic.twitter.com/WPC8qAItc1
— WORLD AT WAR (@World_At_War_6) April 30, 2024
அந்த நபர் பொதுமக்களை தாக்கியது மட்டுமன்றி இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனையின் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவருக்கு 36 வயது என்றும், இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டார்களா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனநிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. "இன்று காலை ஹைனால்ட் நிலையத்தில் நடந்த சம்பவத்தை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்என பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கூறினார். ஹைனால்ட் நகர காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
