அட்சய திருதியை தினத்தில் அதிர்ச்சி... பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

 
சர்மிளா

மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் வசிப்பவர் சர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சர்மிளா நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவான கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு சேகரிக்கப்பட்டது. மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web