அதிர்ச்சி.. இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, முகம் சிதைத்து இளைஞர் படுகொலை!

 
கொலை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் இன்று அதிகாலை இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்த சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, மீஞ்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், அங்கு இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் சடலத்தின் அடையாளம் காணும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்ட நபர் யார் ? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் ? சொத்து தகராறு காரணமாக அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து மர்ம நபர்கள் சடலத்தை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பிசி சென்றார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web