அதிர்ச்சி.. பயங்கர விபத்தில் சிக்கிய தனியார் ஊழியர்கள் சென்ற பேருந்து.. 18 பேர் படுகாயம்!

 
ராணிப்பேட்டை விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 ஊழியர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வாலாஜாபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், காயமடைந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web