ஷாக்.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. சிக்கிய கட்டுக்கட்டான பணம்!

விழுப்புரம் திரு.வி.கே.வீதியில் பத்திரப்பதிவு இணைப் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டாவது முறையாக சோதனை நடத்தினர். பத்திரப் பதிவுக்கு கூடுதல் பணம் பெற்ற புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது 4 பேர் பத்திரம் பதிவு செய்ய காத்திருந்தனர். இதையடுத்து, இணைப் பதிவாளர் பொறுப்பு பூங்காவனம் மற்றும் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், வழக்குப் பதிவு ஆவணங்கள் சிலவற்றைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதே அலுவலகத்தில் கடந்த மே 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து துணைப்பதிவாளர் தையல்நாயகியை கைது செய்தனர். மேலும் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!