அதிர்ச்சி.. ஆன்லைன் விளையாட்டில் சிக்கி 14வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை!

ஆன்லைன் கேமில் சிக்கி, பள்ளி மாணவன் ஒருவர்ன் 14வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பிப்ம்ரி-சின்ச்வாட் மாவட்டத்தில் 16 வயது சிறுவன் தனது குடியிருப்பு கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
VIDEO | A 16-year-old boy committed suicide by jumping from the 14th floor of his residential building in the Pipmri-Chinchwad district of Maharashtra.
— Press Trust of India (@PTI_News) July 29, 2024
"In the Kiwale area, a 16-year-old boy jumped from the 14th floor and ended his life. The primary information in our… pic.twitter.com/ASkfHDo0GG
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ஆன்லைன் கேமில் சிக்கி 14வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 16 வயது சிறுவன் மடிக்கணினியில் கேம் விளையாடுவதை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்களுக்குத் தெரிவித்ததாகவும், சிறுவனின் தற்கொலை நடவடிக்கைக்கு இது காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
சிறுவனின் அறையை சோதனையிட்ட போலீசார், அறையில் 'லாக் அவுட் எக்ஸ்டி' என்று எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பையும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவன் தனது மடிக்கணினியில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடுபவன் என்றும், சிறுவனின் தற்கொலைக்கு அந்த விளையாட்டு முக்கியப் பங்காற்றியிருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் நம்புவதாகவும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
போலீசாரின் அறிக்கைகளின்படி, சிறுவன் படிப்பில் சிறந்தவர் என்றும், ஆனால் கடந்த ஆறு மாதங்களாக, அவரது நடவடிக்கையில் பெரும் மாறுதல் இருந்ததாகவும் தந்தை தெரிவித்ததாக கூறினர். அவனது குறிப்பேட்டில் சிறுவன் ஆன்லைனில் குழு விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதைக் குறிக்கும் சில வரைபடங்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர், மேலும் இது 'ப்ளூ வேல்' போன்ற விளையாட்டாக இருக்கும் என்றும் அவர்கள் சந்தேகித்தனர்.
இதற்கிடையில், காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் உண்மைகளைக் கண்டறிய சைபர் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!