அதிர்ச்சி... டியூஷன் பீஸ் கேட்ட ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்.. பகீர் சிசிடிவி வீடியோ!

 
டியூஷன் பீஸ்

தன்னிடம் டியூஷன் படித்த மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்வாகி, மூன்றாண்டுகள் கடந்து சென்ற பின்னரும், இன்னும் டியூஷன் பீஸ் தராததால், தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களிடம் டியூஷன் பீஸ் எப்போ தர்றீங்க என்று கேட்டு வந்துள்ளார். வீட்டில் பணம் வாங்கி, செலவழித்து விட்ட மாணவர்கள், டியூஷன் வாத்தியாரை தனியே அழைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜவுரா ரோட் பகுதியில் வசித்து வருபவர் கிர்வார் சிங். கிர்வார் சிங், அந்த பகுதியில் தனியே கோச்சிங் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். கோச்சிங் செண்டரில் பல வகுப்பு மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்து, பொதுத் தேர்வு, அரசு தேர்வு எழுதுவதற்கு சொல்லிக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் 12ம் வகுப்பு தோல்வியடைந்த விவேகே ரத்தோர் மற்றும் வினய் ரத்தோ ஆகிய இருவரும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், இவரது டியூஷன் சென்டரில் சேர்ந்துள்ளனர்.


கோச்சிங் சென்டரில் டியூஷன் படித்த இருவரும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, தேர்ச்சியும் அடைந்து விட்டனர். ஆனால், தேர்ச்சியடைந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், இருவரும் டியூஷன் கட்டணம் தரவில்லை. இருவருமே வீட்டில் பணம் வாங்கி விட்டு, செலவழித்துள்ளனர். வாத்தியாரிடம் சாக்குப்போக்கு சொல்லி, மூன்றாண்டுகளைக் கடத்தி விட்டனர். அவரும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இரு மாணவர்களிடம் பீஸ் எப்போது தருவீர்கள் என்று கேட்டு வந்துள்ளார். ஆசிரியர் கிர்வார் தொடர்ந்து தங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக மாணவர்கள் ஆத்திரமடைந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜூன் 22ம் தேதி விபரீத முடிவை எடுத்தனர். 

பண விவகாரம் குறித்து பேசலாம்... எப்போது தருவது என பேசி ஒரு முடிவு செய்யலாம் என ஆசிரியரை பைக்கில் வைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். ரோட்டில் நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென கிர்வரை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த பதைபதைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் வீடியோவாக பதிவாகியுள்ளது. 

gun

வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த ஆசிரியர் கிர்வாரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குவாலியர் மருத்துமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆசிரியர் கிர்வாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளைஞர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ஆசிரியர் ஒருவரை அவரது முன்னாள் மாணவர்களே துப்பாக்கியால் சுட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web