அதிர்ச்சி.. தாய் முன்னே நடந்த கொடூரம்.. மகன் வெட்டி படுகொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்!

 
இசக்கிமுத்து

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் இசக்கிமுத்து. 35 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே உள்ள திம்மராஜபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கட்டையால் அடித்து கொலை

இந்த நிலையில் தாயாருடன் தினசரி கட்டிட வேலைகளை முடித்துவிட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இந்த நேரத்தில் சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே வந்தபோது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தலை மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து இறந்தார். தாய் தன் கண் முன்னே மகன் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொலை நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சோரா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதை நேரில் பார்த்த தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இசக்கிமுத்து மீது சில வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது குடும்ப பிரச்சனையா? இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகர பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!