அதிர்ச்சி... இரட்டை குழந்தைகளை 8வது மாடியிலிருந்து வீசி, இளம்பெண் தற்கொலை!

 
சவுந்தர்யா

என்ன கொடுமை நிகழ்ந்திருந்தாலும், இந்த முடிவை எடுப்பதற்குள் அந்த தாய் மனதளவில் எத்தனை துயரத்தைச் சுமந்திருப்பாள். தனக்கு நேர்ந்த அநீதியும், கொடுமைகளும், இந்த கொடூரமான கணவனிடம் இருந்து தன்னுடைய பிள்ளைகளுக்கும் தொடரக் கூடாது என்று நினைத்து, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொல்லத் துணிந்த மனம் கொடூர வேதனையில் துவண்டிருக்கும். எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்து துயரத்தை சுமந்து விழித்திருந்தாளோ என்று உறவினர்கள் அரற்றுகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் உப்பல் பகுதியில், தன்னுடைய இரட்டைக் குழந்தைகளையும் 8வது மாடியில் இருந்து கீழே வீசிக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்து கொண்டார் சவுந்தர்யா. இந்த சம்பவம் ஐதராபாத் நகரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது போலீசாரின் விசாரணையில், வரதட்சணைக் கொடுமையால் சவுந்தர்யா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

உப்பல் பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ள கணேஷ் (30) என்பவருக்கும், மஞ்சுரியாலாவைச் சேர்ந்த சவுந்தர்யா(25)வுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ2.5 லட்சம் பணமும், யாதகிரியில் விவசாய நிலத்தையும் சவுந்தர்யாவின் பெற்றோர் கணேசுக்கு தந்தனர். ஆனால், ஆசைக்கு அளவு ஏது. தொடர்ந்து பனம் கேட்டு அடிக்கடி கணேஷ் சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. 

திருமணத்திற்கு பிறகு இருவரும் செகந்திராபாத்தில் வசித்த நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் நித்யா என்கிற மகளும், நிதரஸ் என்கிற மகனும் இரட்டையர்களாக உள்ளனர். இந்நிலையில் சவுந்தர்யாவின் தாயாருக்கு, அரசு சார்பில் பன்சிலால்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கை அறையுடன் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை தனக்கு வரதட்சணையாக தரும்படி கணேஷ் கேட்டுள்ளார். 

Police-arrest

இந்நிலையில், கணவரின் கொடுமைகள் ஒரு கட்டத்தில் தாங்காமல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யா தனது குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் கணேஷ் போன் செய்து, வீட்டை எழுதி வாங்கி வரும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தொடர்ந்து கணவரின் கொடுமைகளால் மனமுடைந்த சவுந்தர்யா, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு 8வது மாடிக்கு அழைத்து சென்று, அங்கிருந்து 2 குழந்தைகளையும் கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தன. மேலும் சவுந்தர்யாவும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

குதித்து தற்கொலை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web