ஷாக் வீடியோ.. சாலையில் சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்!
பர்தா அணிந்து சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. உடல் ரீதியான வன்முறை, மன உளைச்சல், பாலியல் துன்புறுத்தல், வாய்மொழி துஷ்பிரயோகம், காயம், பாலியல் வன்கொடுமை, சிறுமிகள் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் தினமும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதை தடுக்க போலீசார் எவ்வளவோ முயன்றும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் குறையவில்லை.
#यूपी के #मेरठ में सड़क पर बुर्का पहनकर गुजर रही थी लड़की, तभी पीछे से आया लड़का, युवती के कमर में काटी चुटकी, नकाब पहने लड़की से छेड़छाड़ की पूरी घटना सीसीटीवी कैमरे में हुई कैद...!!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) July 4, 2024
"आइए जानते हैं पूरा मामला क्या है"
उत्तर प्रदेश के मेरठ से एक ऐसा मामला सामने आया जिसे जानकर… pic.twitter.com/DGOWwxeGar
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பகலில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த நபர் ஒருவர் பர்தா அணிந்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து, மீரட் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜூன் 24ம் தேதி சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!