அதிர்ச்சி... நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ், நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யேமன் தலைநகர் சனா விமான நிலையத்துக்கு டெட்ராஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., பிரதிநிதிகள் நேற்று விமான நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து டெட்ராஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில், “யேமனுக்கு சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும், பிடித்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க சென்றிருந்தோம்.
சனாவில் விமானம் ஏறுவதற்காக காத்திருந்த போது, விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. எங்கள் விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். விமான நிலையத்தில் 2 பேர் பலியானார்கள்.

விமான ஓடுதளம் சேதமடைந்த நிலையில் அதனை சரிசெய்யும் வரை அங்கே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நானும், என்னுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு கடற்கரை மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், சனா விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
