அதிர்ச்சி வீடியோ... பொற்கோவில் அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... பெரும் பதற்றம்... 5 பேர் கைது!

 
பொற்கோவில் குண்டுவெடிப்பு பஞ்சாப்

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகே இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த நிலையில், மீண்டும் குண்டு வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 6ம் தேதியும், மே 8ம் தேதியும் ஏற்கெனவே பொற்கோவில் அருகே வெடிகுண்டு வெடித்த நிலையில், தற்போது நேற்று மே 10ம் தேதியும் வெடிகுண்டு வெடித்துள்ளது. இப்படி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் பொற்கோவில் அருகிலேயே வெடித்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியான சம்பவ இடத்துக்கு விரைந்த போலீலிசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து, வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்றிரவு 12 மணியளவில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. மர்ம பொருள் வெடித்ததில் அந்தப் பகுதியில் உள்ள சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற தேசிய புலனாய்வு அமைப்பும், பஞ்சாப் மாநில போலீசாரும் இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொற்கோவில் குண்டுவெடிப்பு

இந்த குண்டு வெடிப்பில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் இது பொற்கோவில் அருகே நிகழ்ந்த மூன்றாவது வெடிகுண்டு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web