அதிர்ச்சி வீடியோ.. 4வது மாடியில் இருந்து குதித்து அரசு அதிகாரி தற்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வீட்டு வசதி வாரிய கணக்காளர் அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சிசிடிவி வீடியோவில், நரேஷ் சாஹு என்ற கணக்காளர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஹவுசிங் போர்டு கணக்காளர் நரேஷ் சாஹு எதையோ யோசித்து கொண்டே வருகிறார்.
CCTV footage from the housing board in Chhattisgarh's Raipur shows an accountant jumping to death from the 4th floor.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 5, 2024
The deceased was identified as Naresh Sahu. The police are investigating the cause behind him taking the extreme step. pic.twitter.com/97cbM7TdMF
அப்போது திடீரென வேதனை அடைந்த அவர், அங்குள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து வேகமாக கீழே குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வீட்டு வசதி வாரிய கணக்காளர் திடீரென தற்கொலை, செய்ததற்கான காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நரேஷ் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!