பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!
Jul 11, 2024, 20:16 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளத்தில் திருச்சியில் வசித்து வரும் ரவுடி காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை காட்டுப்பகுதியில் போலீசார் என்கவுண்டர் நடத்தியதில் உயிரிழந்தார்.
ரவுடி துரையை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, டிஐஜி மனோகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி துரை , ரவுடி இளவரசனை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web