அதிர்ச்சி வீடியோ!! பிரபல பாடகி மீது துப்பாக்கி சூடு!! மேடையிலேயே சரிந்த பாடகி!!

 
நிஷா உபாத்யாய்

 பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய். இவர் பீகார் சரண்மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தில் வசித்து வருகிறார். பாட்னாவில் வசிக்கும் அவர் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். இவரது குரலுக்கும் பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில்  நிகழ்ச்சி ஒன்றில் மே 31ம் தேதி இரவு பாடிக்கொண்டிருந்தார்.  


வீரேந்திரசிங் என்பவரது வீட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவரது இசையை ரசிக்க பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது. திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் பாடகியை  துப்பாக்கியால் சுட்டார். இதில் பாடகி நிஷாவின் இடது தொடையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொண்டையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிஷா உபாத்யாய்

இச்சம்பவம் குறித்து  பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  காவல்நிலைய  அதிகாரி இச்சம்பவம் குறித்து யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. சுயவிருப்பத்தின் பேரில் தான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.  திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவியது. மருத்துவமனையில் பாடகி நலமாக உள்ளார் என தகவல்கள் வெளியான பின்பே அப்பகுதியில் மெல்ல அமைதி திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web