ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது!

 
ஸ்ருதிஹாசன்

ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்ததுநடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் அன்ஃபாலோ செய்து, அவருடனான புகைப்படங்களையும் நீக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் ஸ்ருதி. 

ஸ்ருதிஹாசன்

இந்நிலையில், சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து திடீரென சாந்தனுவை அன்ஃபாலோ செய்துள்ளார் ஸ்ருதி. மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஸ்ருதி ஹாசன்

ஒரே நேரத்தில் சாந்தனுவும் ஸ்ருதியை சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார். ‘சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது’ எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி. சாந்தனுவுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதிஹாசன் டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web