மண்ணில் இருந்து மறைந்தாலும் மனதை விட்டு மறையவில்லை... கணவருக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்ருதி !!
சன் தொலைக்காட்சி முண்ணனி சீரியல்களில் 'நாதஸ்வரம்', 'பாரதிகண்ணம்மா' சீரியல்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கும் அரவிந்த்துக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில், 30 வயதான அவரது கணவர் அரவிந்த் ஆகஸ்ட் மாதத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தனது கணவரின் ஆன்மா தன்னைப் பாதுகாப்பதாக கூறிவரும் ஸ்ருதி கணவருடனான வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவைகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ருதி.தன் கணவருக்காக முன்பு பாடியுள்ள ஒரு பாடலைப் பதிவிட்டு ”இந்த பாடல் நம்முடன் இப்படி தொடர்பாகும் என்று நான் நினைக்கவே இல்லை.
உன்னுடன் நான் வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்கும். வாழ்க்கை மிகவும் குறுகியது.”அதில், நாம் முடிந்தளவு பாசிட்டிவான எண்ணங்களையும், நல்ல செய்திகளையும் மட்டுமே செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். நீ இப்போதும் அன்போடு உன் பிரார்த்தனைகளால் என்னை வழிநடத்துவாய் என நம்புகிறேன். லவ் யூ! என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி. கலங்கடிக்கும் இவரது பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!