ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் நீ கேப்பில் மறைத்து எடுத்து வரப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருகை தருகின்றன. கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் தொடர் சோதனையின் போது, தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
On the basis of specific intelligence, Officers of the Air Intelligence Unit, Tiruchirapalli International Airport intercepted a Male Passenger who attempted to cross the green channel & recovered Gold in Paste form concealed under knee caps worn by him in his thighs.@cbic_india pic.twitter.com/OdsTLsgLLM
— Trichy Customs (Preventive) Commissionerate (@commrprevcustry) July 5, 2024
இதன் ஒரு பகுதியாக இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.அப்போது மாலே நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவர், அதிகாரிகளை தாண்டிச் செல்ல முயன்று உள்ளார். அவர் மீது சந்தேகம் எழுந்ததால், அவரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அவரது உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த நீ கேப் என்று அழைக்கப்படும் முழங்காலில் அணியும் துணி, வித்தியாசமாக தெரிந்ததால் அதனை கழற்றி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அந்த நீ கேப்பிற்குள் தங்கம் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் எடை ஒரு கிலோ 605 கிராம் எனவும், இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!