செம ஜாலி!! மே மாதத்தின் அனைத்து நாட்களுமே திறந்திருக்கும்!! வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் !!
கோடை விடுமுறையில் பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். அதிக பொருட் செலவில்லாத நாள் முழுவதும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த இடமாக குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி பார்க்கும் இடங்களில் ஒன்றாக திகழ்வது வண்டலூர் உயிரியல்பூங்காதான். தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய உயிரியல் பூங்கா சென்னையில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா. இது
இந்தியாவின் பழைமையான பூங்காவாகவும் இருந்து வருகிறது. இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். வண்டலூர் பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வாரம் ஒரு நாள் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிக்காக பூங்காக்கள் மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கோடை விடுமுறை முடியும் வரை அதாவது மே 30ம் தேதி வரை அனைத்து நாட்களுமே வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வண்டலூருக்கு வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுமுறை கிடையாது எல்லா நாட்களும் செயல்படும் என்ற பூங்கா நிர்வாகத்தின் அறிவிப்பினால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!