செம... மின்சாரம் குறித்த புகார்களுக்கு SMS மூலம் தீர்வு!
மின்வாரியம் குறித்த புகார்களை பதிவு செய்ய மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் மின்சார தலைமை அலுவலகத்தில் “மின்னகம்” என்ற பெயரில் 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
9498794987 என்ற அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் புகார் மீது விரைவான விசாரணை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக குறுஞ்செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புகார் அளிக்கும் பொதுமக்கள் புகாரில் மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் எண்ணை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் எண்ணிற்கு உடனடியாக SMS அனுப்பப்படும். இந்த எஸ்எம்எஸ் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!