இன்று சகல செல்வங்களை சேர்க்கும் சோமவாரப் பிரதோஷம்... இப்படி வழிபாடு செய்து பாருங்க!
இன்று மே 20ம் தேதி திங்கட்கிழமை பிரதோஷம். சிவபெருமானுக்குரிய தினம். எல்லா நாட்களிலும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். பிரதோஷ நாட்களில் அதிலும் திங்கட்கிழமை சோமவாரத்தில் வருகிற பிரதோஷம் கூடுதல் சிறப்பு. கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் தான். இருந்தபோதிலும் நம் கர்மவினைகளிலிருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம்.
புராண காலத்தில் தாருகாவனத்து ரிஷிகள் கர்வத்தால் தலைகால் புரியாமல் ஆடிய போது சிவபெருமான் பிட்சாடனராக வந்து பாடம் புகட்டினார் .கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர் என்கிறது சிவபுராணம். அதனால்தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்றைய பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது ஐதிகம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும்.
பிரதோஷ வேளையில், முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களையும்,வில்வம், பூக்களை வழங்கலாம்.

இன்றைய தினம் மாலை 4.30 லிருந்து 6 மணி வரை சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம். இத்தகைய பெருமைகளை உடைய பிரதோஷ நாளில் மாலையில் சிவ தரிசனம் செய்வோம். சகல பாவங்களில் இருந்தும் விடுபட அவன் தாள் பணிவோம். சிவாயநம சொல்லுவோம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
