தந்தை கொடுத்த மொத்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்த மகன்.. அடுத்து நடந்த சோக சம்பவம்!

 
தனுஷ்

வடசென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்தவர் தனுஷ். இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வருகிறார். அப்படி விளையாடி நிறைய பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்க தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை வங்கி கணக்கு மூலம் 4 ஆயிரத்தை மட்டுமே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்ட தனுஷ், கடைசியில் பணத்துடன் ஆன்லைன் ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்துள்ளார். இதனால் தனுஷ் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். இதையடுத்து, நீண்ட நேரமாகியும் தனுஷ் கதவைத் திறக்காததால், தனுஷின் தங்கைக்கு சந்தேகம் ஏற்பட்டு, கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவை திறக்காததால் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அப்போதும் தனுஷ் கதவை திறக்காததால், குடும்பத்தினர் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web